இதில் அனைவருக்கும் இருக்கும் பெரும் கேள்வி என்னவென்றால்? நாட்டின் பழைய நிலவரம் திரும்பிய பிறகு நமது பணம் விரைவில் கிடைக்குமா?
நீண்ட நாட்களாக கிடைக்காத பிஏசிஎல் பணம் தற்போது கிடைத்துக் கொண்டிருக்கிறது என்று வாடிக்கையாளர் மற்றும் களப்பணியாளர்கள் சந்தோஷப்பட்டு கொண்டிருந்த நிலையில்.
இந்த சூழ்நிலை அனைவருக்குமே வருத்தத்தைத் தருகிறது.
Today Latest News Paper
காரணம் என்னவென்றால்? உலகம் முழுக்க ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில் அந்த பாதிப்பு இந்தியாவையும் பின்தொடர்ந்து விட்டது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
இந்தியாவுமே இதனால் அதிகம் பாதிக்கப்பட்ட நிலையில் PACL நிலவரமும் சற்று பாதிப்படைகிறது.
இதில் வருத்தமானது என்னவென்றால் ஐயாயிரத்திற்கும் அதிக தொகையை பெறப்பட்டு கொண்டிருந்த தருணத்தில் இந்த சூழ்நிலை வந்தது தான்.
இது PACL வேலை செய்த களப்பணியாளர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் அனைவருக்குமே பெரும் வருத்தத்தை விலைவித்த சூழ்நிலையாக அமைய பட்டுவிட்டது.
இதில் அனைவருக்கும் இருக்கும் பெரும் கேள்வி என்னவென்றால்?
நாட்டின் பழைய நிலவரம் திரும்பிய பிறகு நமது பணம் விரைவில் கிடைக்குமா?
இல்லை தாமதமாகுமா? என்று ஒரு பெரும் அச்சமும் கேள்வியும் எழும்புகிறது.
இதில் மனிதர்களின் தவறு எதுவுமில்லை PACL பணம் இந்த வருடத்திலேயே அனைவருக்கும் கிடைக்கவேண்டும் என்றுதான் அனைவருமே போராடினார்கள்.
அதற்கான வேலையை நடந்தது இருப்பினும் இதில் யாரும் எதிர்பார்க்காத ஒரு சூழ்நிலையாக அமைந்துவிட்டது.
எதிர்பாராத விதமாக வடமாநிலங்களில் அனைத்து போராட்டக் குழுவினரும் ஒன்று சேர்ந்து போராட ஒரு திட்டம் தீட்டினர்.
இந்த சூழ்நிலையில் இது பெரும் நஷ்டமாக கருதப்படுகிறது பிஏசிஎல் வாடிக்கையாளர்கள் மத்தியில்.
இதற்கு காரணம் சிபி மற்றும் லோதா கமிட்டி தரப்பில் பணத்தை திரும்ப தருவதற்காக எந்த வேலையும் நடைபெற வில்லை அதனால் போராட்டம் நடத்த முடிவு எடுத்துள்ளனர் என்று அர்த்தமல்ல.
வேலை இன்னும் விரைவாக நடைபெற வேண்டும் என்று ஒரு கருத்தை முன்வைத்து தான் போராட துவங்கினர்.
பணத்திற்காக பதிவு செய்த தகவல்களின் தவறுகளை திருத்துவதற்கும், சரி பார்ப்பதற்காகவும் திறக்கப்பட்ட இணைய தளம் இன்னும் வேலை செய்து கொண்டுதான் இருக்கிறது.
அதற்கான கால அவகாசமும் தற்போதும் நீடித்துக் கொண்டுதான் இருக்கிறது.
அதைவிட முக்கியமான விஷயம் என்னவென்றால்? கால அவகாசம் நீடிப்பதால் பணம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட வில்லை என்று அர்த்தமல்ல.
இந்த சூழ்நிலையில் ஐயாயிரத்திற்கும் அதிகமான தொகை நிறைய நபர்களுக்கு வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டது.
தற்போது நாடு இருக்கும் இந்த நிலைமையில் தான் இது தள்ளி வைக்கப்பட்டதாக கருதப்படுகிறது.
உதாரணமாக பணம் பெற்றதாக யாரும் தற்போது உள்ள சூழ்நிலையில் தகவல்கள் பரிமாறவில்லை என்பதே இதற்கு காரணம்.
தற்போது உள்ள இந்த சூழ்நிலையை நாம் அனைவருமே சற்று பொறுமையாக கடக்க வேண்டும்.
காரணம் என்னவென்றால்? நாடு முழுவதும் அனைத்து வேலைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது தான்.
அதுமட்டுமில்லாமல் இந்த பிரச்சனை துவங்குவதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பு அனைத்துப் போராட்ட குழுவின் இருக்கும் சிபி தரப்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டது.
அதில் விரைவில் வாடிக்கையாளர்களின் பணம் திரும்ப தரப்படும் என்று உத்தரவாதம் அளித்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.
பணத்தை திரும்ப தருவதற்கான வேலை நல்ல முறையில் நடந்து கொண்டுதான் இருந்தது.
ஒரு சில வேலைகளும் முடித்து வைக்கப்பட்டது இந்த ஊரடங்கு முடிந்த பிறகு நமது பணம் நல்லமுறையில் திரும்ப பெறுவதற்கான விரைவான வேலை நடைபெறும்
COMMENTS